Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 186


சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும்
சுகமில்லை ஜென்மனுக்கு குய்யரோகம்
சொல்லுகிறேன் செம்பொன்னும் கணைக்கால் துன்பம்
சுற்றத்தார் மனமுறிவர் அரிட்டஞ்செப்பு
சொல்லுகிறேன் கேந்திரமும் கோணம் நன்கு
சுகமாக வாழ்ந்திருப்பன் காடியுள்ளோன்
சொல்லுகிறென் சுயவித்தை மாமன் விருந்தி
சொர்ண நிலமுள்ளவனா மாலுக்கூறே.


மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன். கவனமுடன் கேட்பாயாக! புதன்கிரமானது ஆறு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் அமர அச்சாதகனுக்கு குய்யத்தில் ரோகம் ஏற்படுவதாலும், செம்பொன்னாலும் கணைக்காலின் துன்பம், துன்பம் விளைவதோடு உறவினர்களும் மனம் வேறுபட்டுப் போவார்கள் என்று துன்பங்களைக் கூறுக. கேந்திர கோணத்தில் இருக்க சுகமாக வாழ்ந்து இருப்பன் என்றாலும் வயல், வரப்பு, தோப்பு முதலியன உடையவன் என்றும், தங்கள் விளை நிலத்தில் நல்ல விதைகளையுடையவன் என்றும் மாமன்மார்கள் விருத்தி உடையவன் என்றும், பொன்விளையும் பூமி உள்ளவன் என்றும் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment