தானானயினா மொரு சேதி கேளு |
நான் கூறும் மற்றொரு சேதியினையும் நீ மதித்துக் கேட்பாயாக! தன்மையுள்ள சந்திர இலக்கினாதிபதியானவன் எட்டில் வீண் என்று சொல்லத்தக்க தீய கோள்களுடன் கூடி அவரும் பலராக அல்லது சஷ்டாஷ்டமத்தில் விளங்கில் அச்சாதகன் அஜீரணத்தால் இறப்பான்; அச்சாதகனுக்கு மருந்தீடும் சோற்றால் அச்சமும் உண்டென்று தேன் போன்று இதம் சொல்லும் எனது சற்குருவான போகமா முனிவரது கருணா கடாசத்தால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment