Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 182


பாரப்பா வீரியதோன் குருவும் லக்கினத்திலேறில்
பண்புடனே மிருகத்தால் பாவர் திசைதுன்பமாகும்
சேரப்பா வட்டமத்தோ னிவர்களோடே
சேர்ந்தாறா மிடந்தனிலே நிற்பாராகில்
கூறப்பா சண்டை பல கருவியாலே
கொடுந்துன்பம் ஜென்மனுக்கு வாதையாகும்
நேரப்பா யெனது குரு கடாட்சத்தாலே
நேர்மையுடன் புலிபாணி நிகழ்த்தினேனே.


மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன் கேள்! வீரியன் எனப் புகழப்படும் சூரியனும் குருவும் லக்கின கேந்திரம் ஏற இச்சாதகனுக்கு பாவர்திசையில் மிருகத்தால் துன்பம் நேரும். மேலும் இவர்களுடன் அட்டமத்தோன் சேர்ந்து ஆறாமிடத்தில் நிற்க பல்வேறு வகையான போர்க்கருவிகளால் அச்சென்மனுக்குக் கொடுந்துன்பம் விளையும். இதனை சற்குருவாகிய போகரது கருணா கடாட்சத்தால் புலிப்பாணி உனக்குப் பொருந்தக் கூறினேன்.

No comments:

Post a Comment