Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 158


பாரப்பா பனிரெண்டு யெட்டு ஆறில்
பலமுள்ள படவரவு அதிலேதோன்ற
வீரப்பா வேல்விழியாள் கலகமெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகஞ்சொல்லு
கூறப்பா கொழுநனால் குமரியாலும்
கொற்றவனே குழவியினால் குடிக்குக்கேடாம்
பாரப்பா படவரவு பொல்லாதப்பா
பலதுன்பம் தருகுமடா திசையைநோக்க


மேலும் ஒரு விவரம் கூறுகிறேன் கேட்பாயாக! பலமிக்க பட அரவுகள் 12,8,6 ஆகிய இடங்களில் தோன்ற அச்சாதகனின் இல்லத்தரசியான வேல்விழியாளின் கலகம் மெத்தவும் உண்டு. அவள் கணவனுக்கு ரோகம் ஏற்படும். கணவனாலும், அவன் மனைவியாலும், அவர்களுக்கு வாய்க்கும் குழந்தையாலும் குடிக்குக் கேடே விளையும். அப்பட அரவுகள் பொல்லாதன என்று உணர்வாயாக. பலவிதமான துன்பங்களும் உண்டாகும் என்பதை திசாபுத்தி அறிந்து தெளிவாகக் கூறுக.

No comments:

Post a Comment