Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 135


பாரப்பா ஈரிரண்டு தனில் யிருநான் கொன்றில்
பகருகின்ற பகலவனும் புந்திகூடில்
சீரப்பா நிதிகருமன் கண்ணுற்றாலும்
நிலத்தின் நல்லபூபதிபோ லிருப்பான்காளை
கூறப்பா குதிரைகளுங் காடியுண்டு
கொற்றவனே யேவலாள் மெத்தவுண்டு
ஆரப்பா அயிஸ்வரியம் மெத்தவாழும்
அப்பனே ராசியுட பெலத்தால்கூறே.


மற்றொரு கருத்தினையும் நீ மனங் கொள்வாயாக! இலக்கினத்திற்கு நான்கு-எட்டு-ஒன்றாம் இடம் ஆகியவற்றில் பகலவன் எனப்பகரும் சூரியனும் புதனும் கூடி நிற்க அவர்களை குருவும் பத்தாமிடத்ததிபதியும் கண்ணுற்றாலும் அவன் இந்நிலவுலகில் புகழ்பரப்பிப் பெருஞ் செல்வனாக இருப்பான் அவனுக்கு நிறையக் குதிரைகளும் விளைவயலும் தோப்பும் துரவும், மற்றும் ஏவலாட்களும் மிகவுண்டு அவனுக்கு வெகுதனம் வாய்ப்பதாகும். அவனது ராசியின் பலம் அறிந்து பலன் கூறுக என்பதைப் போகரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment