Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 131




ஆரப்பா அயன்விதியை அரையக்கேளு
அப்பனே அஞ்சுள்ளோன் ஆரோன்கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திரதோஷம்
சிவசிவா யிது மூன்றில் சேர்ந்துநிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
பலனுண்டு பலதீர்த்த மாடச்சொல்லே.


கருத்தாக நான் கூறுகிறேன். நீ நன்கு உணர்ந்து கேட்பாயாக! பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான ஐந்துக்குடையவனுடன் ஆறுக்குடையவன் சேர அச்சென்மனுக்கு புத்திரதோஷம் ஏற்படும். சிவபரம் பொருளின் பேரருளால் இவர்கள் மூன்றாம் இடத்தில் நிற்கவும், அவர்களைத் தீயவர்கள் கண்ணுற்று நோக்கினாலும் அச்சென்மனுக்கு கொள்ளியிடப் பிள்ளையில்லை என்றே கூறுக. ஆனால் பரமகுருவான பிரகஸ்பதி அவர்களைக் கண்ணுற்று நோக்கினால் பலன் உண்டு என்றே கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment