Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 130


ஆரப்பா நாலஞ்சு பேர்கள்கூட
அப்பனே ரெண்டொருவர் முன்பின் நிற்க
பாரப்பா பண்டுபொருள் பதியும் தீதி
பதிகடந்து அலைவனடா பொருளுங்கொஞ்சம்
கூறப்பா குடிநாதன் சேர்ந்திருக்க
கொற்றவனே குழவிக்கு நிதியும்மெத்த
சீரப்பா போகருட கடாட்சத்தலே
செப்பினேன் புலிப்பாணி திறமாய்த்தானே


மற்றொரு கருத்தையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக! நான்கு அல்லது ஐந்து பேர் ஒரு மனையில் கூட, மற்றும் இரண்டொருவர் முன்பின்னாக நிற்க, பூர்வீக சொத்துக்கும், மனைக்கும் தீமையுண்டாம். அவன் பிறந்த ஊரைவிட்டு வேறிடம் சென்று அலைவன். அவனுக்கு வாய்க்கும் பொருளும் அற்பமே ஆயினும் இலக்கினாதிபதி அவர்களுடன் கூடினால் அச்சென்மனுக்கு மிகச்சீரே கூடினால் விளையும் என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment