Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 126


தேரான செவ்வாய்க்கி வியமா றெட்டில்
திடமுள்ள சுக்கிரனு மதனில்மேவ
பாரான பண்டுபொருள் மனைபால்வாதம்
பகருகின்ற பங்காளி துணைவனாலும்
கூறான குழவிக்கே யெதிரியாலே
கொற்றவனே யதிகாரியாலும் வெற்றி
சீரான செவ்வாயும் இதுபோல் செப்பு
சிவசிவா சித்திரமும் திசையைப்பாரே


..இதனையும் நீ நன்குணர்ந்து கேட்பாயாக, சேய் என்றழைக்கப்படும் செவ்வாய் 12,6,8 ஆகிய இடங்களில் சுக்கிரச்சாரியார் பலமுடன் இருப்பானாரால் மிகவும் சிறப்பு மிக்க பூர்விகப்பொருளாலும் மனையாலும் விவாதம் புரிவதாலும் மற்றும் அதற்காகவே உள்ள பங்காளிகளாலும் அச்சென்மனுக்கு வெற்றி. அதுமட்டுமல்லாமல் எதிரியாலும் எதிர்த்து வரும் அதிகாரியாலும் வெற்றியே நேரும். இதில் செவ்வாய் நின்ற நிலையும் பலமும் அறிந்து தசாபுத்தி அறிந்து பலன் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment