Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 122


கூறப்பா யின்னமொரு புதுமைசொல்வேன்
குமரனுக்கு குருச்சந்திர பலனைக்கேளு
சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும்
ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும்
கூறப்பா கோதையரால் பொருளுஞ்சேரும்
குவலயத்தில் போர் விளங்கோன் கடாட்ச முள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால்
அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே


இன்னுமொரு புதுமையினையும் கூறுவேன், கேட்பாயாக! குரு சந்திரயோகத்துடன் பிறந்த ஜென்மனுக்கு மிகவும் சிறப்பே கிடைக்கும். செம்பொன்னும் நன்மனையும் அவனுக்கு வாய்க்கும். அவன் பிறந்த மனையைத் தெய்வம் காவல் கொள்ளும். பெண்களால் நிறைந்த தனலாபம் ஏற்படும். பூமியில் அவன் பேரும் புகழும் பெற்று வாழ்வான். இறையருள் வாய்ந்தவன். ஆனால் குரு சந்திரயோகம் தந்த பாவாதிபதி மறைந்தால் இப்பலனைக் கூறாதே எனப் போகர் அருளாணை பெற்ற புலிப்பாணி நவின்றேன்.

No comments:

Post a Comment