Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 121


ஆரப்பா யின்னமொன்று அரையக்கேளு
அப்பனே அம்புலிக்கு ஆரே ழெட்டில்
சீரப்பா சுபர் நிற்க ஜென்மன்தானும்
சிறப்பாக மேதினியில் நலமாய்வாழ்வான்
பூரப்பா பேய்பூதம் வசியமாகும்
பூதத்தில் அரசனிடம் சேனைகாப்பன்
கூறப்பா குடிநாதன் கெட்டானானால்
குமரனுக்கு யோகங்கள் குலைந்துபோச்சே


மேலும் ஒன்றைக் குறிப்பிடுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் நிற்கப் பிறந்த சாதகன் இப்பூமியில் மிகச் சிறப்பையே அடைகிறான். நலமுள்ள வாழ்வே பெறுகிறான். இவனுக்குப் பேய், பூதம் ஆகியவை வசியமாகும். மேலும் அரசசெல்வாக்கு பெறுவான். ஆனால் இலக்கினாதிபதி கெட்டால் இந்த யோகங்கள் குலையும் என்பதையும் கிரகநிலவரங்களை நன்கு ஆராய்ந்து கூறுவாயாக எனப் போகர் அருள் பெற்ற புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment