பாடுவாய் புந்தி வெள்ளி நாலில் நிற்க |
மற்றொன்றையும் கூறுவேன், கேட்பாயாக! பெருமை மிகு புதனும் சுக்கிரனும் இலக்கினத்திற்கு நான்காம் இடத்தில் நிற்க இலக்கினாதிபதியும் கேந்திரத்தில் நின்றால் எல்லா சுகபோகமும் உள்ளவன், மேலும் சுபர்களின் திருஷ்டி பெற்றால் பெருமைமிகு சுகமும், உப்பரிகை மேடையும் நாடும் உள்ளவன், இச்சென்மனுக்கு இந்நிலவுலகில் மிகவும் யோகம் உண்டென்றும் இவன் பெயரும் புகழும் விளக்கம் பெறும் என்பதும் இவன் வெகுதனம் உடையவன் என்பதும் நிதர் சனமே. எனினும் சூரியன் நின்ற இடத்தை நன்கு ஆராய்ந்து கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி உரைத்தேன்.
No comments:
Post a Comment