Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 114


ஆரப்பா யின்னமொரு புதுமைக்கேளு
அம்புலியும் அசுரகுரு யேழில்நிற்க
கூறப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலரைக்கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிவிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவன் ஸ்தனங்குலுங்க வருவாள்பாரே


இன்னும் ஓர் அதியசயமான செய்தியையும் கூறுகிறேன். நன்கு ஆராய்ந்து கேட்பாயாக! சந்திரனும் அசுரகுருவான சுக்கிரனும் இலக்கினத்திற்கு ஏழில் நிற்க அச்சாதகி கிழவனுக்கு மாலையிட்டு அவனால் மனநிறைவு பெறாமல் காமவயப்பட்டு பலரையும் கூடி சிறப்பான புதல்வனையும் பெற்றெடுத்து அவனைத் தொட்டிலிலிட்டு ஊரார் வியக்க ஆட்டுவதோடு தனது ஸ்தனங்கள் குலுங்கப் பெருமையோடு வருவாள் என்பதையும் புலிப்பாணி உனக்கு உணர்த்தினேன்.

No comments:

Post a Comment