Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 100


கூறப்பா கதிருக்கு கணேசன் சக்தி
கொற்றவனே அம்புலிக்கு ருத்திரன் மாரி
ஆரப்பா வெகுபேர்க்கு அமுதளிப்பன்
அப்பனே அன்னசத் திரமுங்கட்டி
பாரப்பா பகைவர்களும் கண்ணுற்றாலும்
பலன்குறைந்துபோகாது விதியும் தீர்க்கம்
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.


இலக்கினாதிபதி கதிரோனாகிய சூரியனாகில் கணேசருக்கும். சக்திக்கும் சந்திரனாகிய ருத்திரன் கெளமாரி ஆகியோருக்கும் கோயில் திருப்பணி செய்வதுடன் வெகுபேர்க்கு அன்னமளிப்பதுடன் அன்ன சத்திரமும் கட்டி ஆதரிப்பான். இச்சாதகனின் 4,10க்குடையோர் கூடிய ஸ்தானத்தை பகைக்கிரகங்கள் பார்வையிட்ட போதும் இவனுக்குப் பலன்கள் குறையா.தீர்க்க ஆயுளே பெறுவான். இதனையும் எனது சற்குருவான போகமா முனிவரின் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment